புதன், 30 ஆகஸ்ட், 2017

*நீங்கள் சைவமா? இல்லவே இல்லை!

இந்த உலகம் முரண்கள் நிறைந்தது.

சந்தைகளில் விற்கப்படும் பதப்படுத்திய சைவ உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்க பன்றி இறைச்சி, கோழி கொழுப்பு, ஆடு மாடுகளின் எலும்பு இது போன்ற பல இறைச்சிகள் சைவ உணவுகளில் சேர்க்கப்படுகிறது.

இவ்வாறு தயாரான சைவ உணவுகளின் அட்டையில் வேறு பெயர்கள் கொண்டு அச்சடித்து விற்பனை செய்து ஏமாற்றி வரும் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது ஏராளமாக இருக்கின்றது.

வெள்ளை சர்க்கரை

சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை என்று விற்கப்படும் சர்க்கரையில் ஆடு, மாடுகளின் எலும்புகளை இயற்கை கார்பன் என்ற பெயரில் சேர்க்கின்றார்கள்.

ஆரஞ்சு ஜூஸ்

கவர்ச்சியாக டப்பாகளில் கண்ணை கவரும் புகைப்படங்களோடு அடைக்கப்பட்டு விற்கும் ஆரஞ்சு ஜூஸ்களில் ஒமேகா 3 எஸ் சத்துக்கள் என்று கூறி, மீன்களின் மூலக்கூறுகளைக் கலந்து தயாரிக்கின்றார்கள்.

வெண்ணிலா ஐஸ்க்ரீம்

வெளிநாடுகளில் இருந்து தயாரிக்கப்படும் நேச்சுரல் ஃப்ளேவர் என்ற பெயர் கொண்ட வெண்ணிலா ஐஸ்க்ரீமில், நீர்நாயின் பின்புறத்தில் இருந்து எடுக்கப்படும் ஓர் மூலப்பொருளை சேர்க்கின்றார்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழம் நீண்ட நாள் பழுக்காமல் பதப்படுத்தி வைப்பதற்கு, இறால் மற்றும் நண்டுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஸ்ப்ரேவை வாழைப்பழத்தின் மீது தெளிக்கின்றார்கள்.

சிவப்பு மிட்டாய்கள்

சிவப்பு நிற மிட்டாய்களில் கருஞ்சிவப்பு நிறத்தை அதிகமாக்க பெண் வகையைச் சார்ந்த Dactylopius coccus Costa எனும் நுண்கிருமியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இதனை carminic acid என்று கூறுகின்றனர்.

பீர் மற்றும் ஒயின்

பிரிட்டன் தயாரிப்பு பீர் மற்றும் ஒயின்களில், மீன்பசைக்கூழ் எனப்படும் ஓரு வகை மூலப்பொருளை மீன்களில் இருந்து பிரித்தெடுத்து சேர்க்கின்றார்கள்.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

உருளைக்கிழங்கு சிப்ஸ் சுவையாக இருப்பதற்கு, கோழியில் இருந்து எடுக்கப்படும் கொழுப்புகளை உருளைக்கிழங்கு சிப்ஸில் கலந்து தயாரிக்கின்றார்கள்.

கேக் மிக்ஸ்

கேக் வகையில் கேக் மிக்ஸ் என்று ஒன்று இருக்கிறது. இதில் பன்றி இறைச்சி அல்லது பன்றி கொழுப்பை சேர்த்து தயாரிக்கின்றார்கள்.

புதன், 9 ஆகஸ்ட், 2017

!!மருத்துவமும் மரணமும்!!

Dr. Gouse MD (Acu)., Singapore.

அனைத்து நோய்களுக்கும் மருந்து கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது என்று பாராட்டப்படக் கூடிய அளவுக்கு உலகளாவிய இன்றைய விஞ்ஞான மருத்துவதின் வளர்ச்சி.

அனைத்து நோய்களையும் பிரித்து ஆராய்ந்து நோயின் மூலாதாரத்தை கண்டுபிடிக்கும் இன்றைய அறிவியல் உலகம். ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனி மருத்துவர். ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனி சிறப்பு மருத்துவர். இத்தனையும் இருந்தும்   ஏன் மரணம் ஏற்படுகிறது?

விஞ்ஞான மருத்துவத்தி்ன் வளர்ச்சியாலும், தற்போது வளர்ந்து வரும் மாற்று மருத்துவ முறைகளாலும் நோய்கள் அனைத்தும் குணப்படுத்தப் படுகின்றதா? அப்படி குணப்படுத்தப் பட்டால் மரணம் ஏன் நிகழ வேண்டும்?

மருத்துவத்தால் நோய்களை குணப்படுத்தி  மரணத்தை தள்ளிபோட   முடியுமானால் மருத்துவர்கள் கூட ஏன் மரணம் அடையவேண்டும்?

மருந்தும் மருத்துவமும் நோய்களை குணப்படுத்த முடியுமானால் பெரும் பணக்காரர்களும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும் ஏன் மரணிக்கவேண்டும்?

ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. அல்லது விபத்து ஏற்பட்டுவிட்டது என்றால் உடனே அவரின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக   அவசர அவசரமாக  ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுபோய் ஆஸ்பத்திரி் ICU வில் சேர்க்கின்றீர்கள். அங்கு அனுமதிக்கப்படவருக்கு  சிகிச்சையளிக்கும் முன்பு, நோயாளின் பொருப்பாளர்களிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது. ஏன் கையெழுத்து வாங்கப்படவேண்டும்? உங்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவருக்கே நீங்கள் பிழைப்பீர்களா, மாட்டீர்களா என்பது தெரியாது. அதனால் தான் மருத்துவர் 24 மணி   அல்லது 48 மணி நேரம் கழித்துதான் எதுவும் சொல்லமுடியும் என கூறுவார். மருத்துவத்தின் மூலம் உங்கள் உயிரை காப்பாற்றிவிட முடியும் என்பது உறுதியானால் மருத்துவர் அவ்வாறு காலக் கெடுவைக் கூறமாட்டார். அவர்
கற்ற கல்வியைக்
கொண்டு அவர் சிகிச்சையளிக்கின்றார் அவ்வளவு தான்.

ஆங்கில மருத்துவர் மட்டுமல்ல, சித்தா, ஆயூர்வேதம், யுனானி, ஹோமியோபதி, நேச்சுரோபதி, மூலிகை மருந்து, அக்குபங்சர் போன்ற எந்த மருத்துவரும் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது. வாழ்நாட்களை தள்ளிப்போடவும் முடியாது.
இதை புரிந்துக் கொள்ளாமல் நாம்தான் மருத்துவர்களை
கடவுள் போல நினைக்கின்றோம். (அந்த கடவுளுக்கும் ஒரு நாள் மரணம் வருகிறது).

அவசர அவசரமாக எப்படியாவது  நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டுவந்து விட்டால் அவர்  பிழைத்து கொள்வார்கள் என நம்புகின்றோம். சில நேரங்களில் சற்று முன்னதாகவே கொண்டு வந்திருந்தால் காப்பாற்றி இருக்க முடியும் என மருத்துவர்களால் சொல்லப்படும்.

அப்படி சற்று முன்னதாக நோயாளியை மருத்துவமனைக்கு  கொண்டுவந்து காப்பாற்ற முடியுமானால், பல நாட்கள் முருத்துவமனை படுக்கையில் இருந்து அங்கேயே பலப்பேரின் உயிர் பிரிகின்றதே...ஏன் அவர்களை காப்பாற்ற முடியவில்லை.

மனித உயிர்களை காப்பாற்ற முடியாவிட்டால் பிறகு ஏன் இத்தனை மருத்துவர்கள்? பல விதமான மருத்துவ முறைகள்?

இன்று ஒவ்வொருவருக்கும் எத்தனையோ விதமான நோய்கள் இருக்கின்றது.  பல புதிய நோய்கள் வந்துக்கொண்டிருகிறது.

இப்படிபட்ட நோய்களுக்கு தண்ணீர், காற்று, பாக்டீரியா, வைரஸ் கிருமிகள், இரசாயண கலப்பட உணவுகள், மன அழுத்தம் போன்ற பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகிறது.

இதை குணப்படுத்த அனைத்து மருத்துவ முறைகளிலும் ஆயிரக்கணக்கான மருந்துகள், பலவிதமான சிகிச்சை முறைகள். இத்தனையும் இருந்தும் நமது உயிரை காப்பாற்ற முடியவில்லையே.

காரணம் உயிரை காப்பாற்றும் மருத்துவர்களும், மருந்துகளும், விஞ்ஞானிகளும் இவ்வுலகில் இல்லை.

எனவே மருத்துவம் மரணத்தை தடுக்காது.
அப்படியென்றால் இத்தனை மருந்துகளும் மருத்துவ முறைகளும் எதற்காக?

ஒவ்வொரு மருத்துவமும் நோய்களை நீக்கி மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான்.
ஆனால் எந்த மருத்துவ முறையாலும் போகும் உயிரை தடுத்து நிறுத்த முடியவில்லை.

காரணம் உயிர் என்பது வேறு. நோய் என்பது வேறு.
உயிர்  இயற்க்கையால் வழங்கப்பட்டது. நோய் மனிதனின் செய்கையால் வரவழைக்கப்பட்டது.

ஒரு நோய் வந்துவிட்டால் இந்த உயிரை காப்பாற்றிக் கொள்ள நமது வாழ்நாளின் பாதி சம்பாத்தியத்தை இழக்கின்றோம். அப்படி இருந்தும் முழுமையாக நோய்களை நீங்கிய பாடில்லை.

உயிர் என்பது என்ன?
நாம் சுவசிக்கும் மூச்சு காற்றா? ஆன்மாவா?ஆக்ஸிஜனா?  ஆவியா? தெரியாது. எது உயிர் என்பது அறிவுக்கும் தெரியவில்லை, அறிவியலாலும்  விளக்க முடியவில்லை.

ஆனால் உயிர் என்று ஒன்று உள்ளது என்பதை நாம் அனைவரும் மனதால் உணர்ந்து அறிவோம்.

நமது உடலினுள் இதயம், மண்ணீரல், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் மூளைப் போன்ற பிரதானமான 6 இராஜ உள் உறுப்புக்களும்,

வயிறு, சிறுகுடல், பெருங்குடல், பித்தப்பை, சிறுநீர்ப்பை போன்ற 5 துணை உறுப்புக்களும் உள்ளன. 

நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களுக்கு மேலே கூறப்பட்டுள்ள உள்ளுறுப்புக்கள் தான் ஊட்டத்தையும், அது இயங்குவதற்கான சக்தியையும் அளிக்கின்றது.

அந்த உள்ளுறுப்புக்களில் ஏதாவது ஒன்று பாதிப்படையும் போது அது சார்ந்த செல்களும் பாதிக்கப்படும். நம் உடலில் பாதிக்கப்படும் செல்கள் அமைந்துள்ள இடத்தைப் பொருத்து நோய்களின் பெயர்கள் சூட்டப்படும்.

உதாரணமாக நம் தோல்களில் ஏற்படும் மாற்றத்தைப் பொருத்து அது கொப்பளம்,  சொறி, சிரங்கு, தேமல், படை, அலர்ஜி, கேன்ஸர் என பெயர்கள் சூட்டப்படும்.

சிறுநீரகத்தின் செல்கள் பாதிப்படைந்தால் சிறுநீரகக் கோளாறு என பெயர் வைக்கப்படும்.

கல்லீரல் செல்கள் பாதிப்படைந்தால் மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் போன்ற பெயர்கள் சூட்டப்படும்.

இவை ஒவ்வொன்றுகும் தனித்தனி சிறப்பு மருத்துவர்கள் இருக்கின்றார்கள்.
ஒரு இருதய ஸ்பெஷலிஸ்டுக்கு சிறுநீரகத்தைப் பத்தி தெரியாது. ஒரு சிறுநீரக ஸ்பெஷலிஸ்டுக்கு இருதய நோயைப் பற்றித் தெரியாது என்று சொல்லும் அளவுக்கு அவரவர் துறையில் அவர்கள் மிகவும் புலமை வாய்ந்தவர்களாக இருக்கின்றார்கள். அப்படி இருந்தும் அந்தந்த உறுப்புக்களில் உண்டாகும் நோய்களை முழுமையாக குணப்படுத்த முடியவில்லை. இருதய ஸ்பெஷலிஸ்ட் கூட ஹார்ட் அட்டாகில் தான் இறக்கின்றார்.

அப்படியானால் மருத்துவமும், மருத்துவர்களும் தேவையில்லையா?

தேவைதான். நிச்சயமாக தேவை.

மருத்துவங்களும், மருந்துகளும் மரணத்தை தடுக்கமுடியாது. ஆனால் நோயின் பதிப்புகளையும், வலிகளையும், கஷ்டங்களையும் நீக்கி  மனிதர்கள் வாழும் காலம் வரை நிம்மதியாக  வாழவைக்க முடியும்.

ஒவ்வொரு மருத்துவத்திற்கும் சில தனிச்சிறப்புகளும், குறிப்பிட்ட  எல்லைகளும் உள்ளது.  இதில் மருந்துகளை நாடவேண்டுமா அல்லது  மருந்துகளே இல்லாத மருத்துவத்தை நாடவேண்டுமா என்பது அவரவர்களின், அறிவையும், அனுபவத்தையும் பொருத்ததாகும்.

ஒவ்வொரு உயிருக்கும் ஒரு கால தவனை உள்ளது. அந்த கால தவனை முடியும் வரை உங்கள் உயிர் உங்களை விட்டு பிரியாது.
உயிர் போகும் அந்த கால நேரம் வந்துவிட்டால் எந்த மருந்தும், மருத்துவரும் நம்மை காப்பாற்ற முடியாது.

கால்தடுக்கி விழுந்து இறப்பவரும் இருக்கின்றார்கள், பத்தடுக்கு மாடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பிழைத்தவரும் இருக்கின்றார்கள்.

நீங்கள் இருக்கும் வரை மரணம் வரப்போவதில்லை.
மரணம் வந்துவிட்டால்
நாம் இருக்கப் போவதுமில்லை.

எனவே தேவையற்ற கவலைகளையும், பயங்களையும் நீக்கிவிட்டு அமைதியாக, நிம்மதியாக ஆரோக்கியமாக வாழ கற்றுக்கொள்வோம்.

நமது இருதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புகள் நம் உடலை இயக்கவில்லை. இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிர்சக்திதான் நமது உடலை இயக்குகிறது.
எனவே உள்ளுறுப்புகள் செயலிலந்து விட்டாலும்,
அவ்உறுப்புகளுக்குத் தேவையான பிரபஞ்ச சக்தி கிடைக்குமானால் மீண்டும் அது உயிர்ப் பெற்றுவிடும்.

இவ்வுலகில் நிரந்தரம் என்று எதுவும் கிடையாது. எல்லாவற்றுக்கும் ஒரு காலத் தவனை உள்ளது. அந்த கால தவனை முடியும் போது அனைத்தும் முடிந்துவிடும். நமது கஷ்டங்களும், கவலைகளும், நோய்களும் கூட முற்றுபெறும்.

உயிருக்கு ஊட்டமளிக்கும் மருந்துகள் எதுவுமில்லை. உயிருக்கு உரமளிப்பதும், ஆற்றலை தருவதும் உங்கள் உள்ளம் தான். உங்கள் உள்ளத்தில் உருவாகின்ற நல்ல சிந்தனைகள், தன்நம்பிக்கை, பொறாமையற்ற எண்ணங்கள் தான்  உங்கள் உயிர் ஆற்றலை மேம்படுத்தும். நிம்மதியான நோய் நொடிகளற்ற வாழ்வைத் பெற்றுத் தரும். எனவே மனதை செம்மைப் படுத்துங்கள். மன நிம்மதியுடன் வாழுங்கள். நன்றி.

Dr. Gouse. MD (Acu)., Singapore.
Whatsup: 9940301233.