வியாழன், 17 மே, 2018

கனவுகள்...

தூக்கம் என்பது ஒரு பயணம் போலத்தான். ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்திருக்கும்போது நம் மனம் ஒரு பயணத்தை முடிக்கின்றது. நம் தூக்கத்தை மூன்று நிலைகளாக பிரிக்கலாம்.

1. மந்தமான விழிப்புக்கும் லேசான தூக்கத்திற்கும் இடைப்பட்ட நிலைகளை. கண் சொக்குதல் இந்த நிலையில் ஏற்படுகிறது.

2. உண்மையான தூக்கம் இங்கே மனதில் நெருக்கமற்ற, உலகு சார்ந்த நினைவு போன்றவை ஏற்படுகின்றன. அதாவது நம்மை சுற்றி நடப்பவை உண்மையும் கற்பனையும் கலந்ததது போல் தோன்றும் நிலை. முதல் நிலையிலிருந்து  இரண்டாம் நிலைக்கு விரைவில் சென்று விடுவோம்.

3. டெல்டா தூக்கம் அல்லது ஆழ்ந்த தூக்கம் இதற்கு செல்ல எப்படியும் 20-30 நிமிடங்கள் ஆகும். ஆழ்ந்த தூக்கத்தில் கனவு காணுவது என்பது மிக மிக குறைவாகவே ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் நம் ஆழ்மனதுடன் தொடர்பு ஏற்படுகிறது, வெளி மனதின் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. ஆனால் ஞாபகங்கள், நம் நோக்கங்கள், பிரச்சினைகள் அப்படியே உள்ளன. ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற 30-40 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் இரண்டாம் நிலைக்கு வந்து விடுகிறோம். எனவே தூங்க ஆரம்பித்து 70-90 நிமிடங்களில் நம் முதல் REM தூக்கம் ஏற்படுகிறது. இந்த நிலையில் ஒரு தற்காலிக விழிப்பு போன்ற நிலை ஏற்படுகிறது.

நாம் மூன்று நிலைகளில் வாழ்கிறோம்.
1. நிஜ உலகு. 2. கற்பனை 3. கனவு. மனமானது.
ஆழ்மனம் மூன்று நிலைகளிலும் வேலை செய்கிறது. ஆனால் வெளிமனது மூன்று நிலைகளிலும் முழுமையாக ஈடுபடுவதில்லை. மூன்று நிலைகளுக்குமான வேறுபாட்டையும் மூன்று நிலைகளிலும் வெளிமனதை வாழ பழக்கினால் கனவைப் பற்றி முழுமையாக நம்மால் புரிந்துகொள்ள முடியும். இதைச் செய்வதால் கனவைப் பற்றி மட்டும் அறியாமல் நம் மனதில் பல விஷயங்களையும் சக்திகளையும் புரிந்துகொள்ள முடியும், பெறமுடியும்.

நம் நிஜ உலகின் இருப்பை நமக்கு உணர்த்துவதில் பெரும்பங்கு வகிப்பது நம் புலன் உணர்ச்சிகளே. ஆனால் நாம் எப்போதும் விழிப்பு நிலையில் இருப்பதில்லை. உளவியலில் சில விசயங்களை ஆராயச் சென்றபோது நான் கண்டறிந்தது மனதை பண்படுத்தும் பல பயிற்சிகள் நம் முன்னோர்கள் சொன்ன ஆன்மீக/யோக பயிற்சிகளை போல் உள்ளது. கிட்டதட்ட நான் யார் என்ற கேள்விக்கு விடைதேடுவது போல இப்பயிற்சிகள் உள்ளன. எல்லாமே எளிமையானவைதான். ஆனால் அதை செய்ய செய்ய நமக்குள் தானாக ஏதோ மாற்றங்கள் உண்டாகின்றன. அதனை முறையாக பயன்படுத்தும்பொழுது பல பயன்கள் கிடைக்கின்றன.

நம் இருப்பை உணர்தல்:

நீங்கள் இருக்கிறீர்களா? இதென்ன கேள்வி இருக்கிறேனே! சரி என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். இதை படித்துக் கொண்டிருக்கிறேன். பிறகு, பாட்டு கேட்கிறேன், பிறகு அருகில் உள்ளவர்களிடம் அவ்வப்போது பேசுகிறேன். இப்படி நீங்கள் செய்யும் ஓவ்வொரு செயல்களையும் எப்போதும் ஊன்றி கவனித்துக் கொண்டே இருக்கிறீர்களா?? இல்லை!!!!

விழிப்புநிலை - ஒரு பயிற்சி:

இந்த பயிற்சியில் கற்பனையாக நினைத்து அதனை நிஜமாக உணர வேண்டும். கற்பனையாக ஒரு பொருளை நினைத்தல் அந்த பொருளின் நுணுக்கங்களை கற்பனையில் கவனித்தல் மனதில் விழிப்புணர்விற்கு பெரிதும் உதவுகிறது. கீழ்காண்பவற்றை கற்பனையாக செய்யவும்.

1.பார்த்தல். நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ. அதன் வடிவம், நிறம், அசைவு, பரிமாணம், அதன் நுணுக்கங்கள் அதைச் சுற்றியுள்ளவை எல்லாவற்றையும் கூர்ந்து நோக்குங்கள்.

2. கேட்டல் - நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ அதன் தொனி, ஏற்ற இறக்கம், ரிதம், ஒலி அளவு போன்றவற்றை கூர்ந்து கேட்டல்.

3. நுகர்தல் - வாசனை எந்த வித வாசனையை முகர்கிறீர்கள். மண், பழங்கள், மலர்கள் இவற்றின் ஒவ்வொரு வாசனையை நுகர்ந்து உணர்தல்(அதாவது ஒரு ரோஜாவை நினைத்தால் அதன் வாசனையை கற்பனையிலேயே உணர்தல்).

4. சுவைத்தல் - கற்பனையில் பலவித பொருட்களின் சுவையை உணர்தல்

5. தொடு உணர்வு - இது மிக முக்கியமானது. சூடு, குளிர்ச்சி, ஈரம், வலி, சாதாரண தொடுதல், சொரசொரப்பானதை தொடுதல் வழப்பானதை தொடுதல், எடை, போன்ற பல உணர்ச்சிகளை

6. சுவாசம் - நாம் எப்போதும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதை எல்லா சமயங்களிலும் உணர்வதில்லை. நம் சுவாசத்தை ஆழமாக கவனியுங்கள்.சீராக சுவாசிக்கவும். அதை ஆழமாக உற்று நோக்கவும்.

7. உணர்ச்சிகள் - நம் உணர்ச்சிகளான கோபம், சந்தோசம், கவலை, வருத்தம், வெறுப்பு போன்ற உணர்வுகளை கற்பனையில் நினைக்கவும். மனதால் உணரவும்.

8. எண்ணம்- இவ்வளவு நேரமாக இவை அத்தனையையும் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சிந்தித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் உணர வேண்டும். அதாவது ஒவ்வொரு சமயமும் நாம் இப்போது என்ன யோசித்து கொண்டிருக்கிறோம் என உணர்தல்.

9. நான் - உங்கள் உலகத்தில் நீங்களும் இருக்கிறீர்கள். ஆமாம் நாம் நம்மைச் சுற்றியுள்ளவற்றை வைத்தே அனைத்தையும் யோசிக்கிறோம், உணர்கிறோம். நான் இதைச் செய்கிறேன் என்கிற போது நீங்கள்(அதாவது உங்கள் மனம்)
உங்களுக்குள் இருந்து யோசிக்கிறது. உங்கள் மனதை உங்களை வெளியே வந்து யோசிக்கச் செய்யுங்கள் நீஙகள் செய்வதை வெளியிலிருந்து ஒரு வேறு நபரை கவனிப்பது போல செய்பவற்றை கவனிக்க செய்யுங்கள்.

10. விழிப்புணர்வை உணர்தல்- நீங்கள் எப்போதும் எல்லாவற்றையும் ஆழ்ந்து நோக்குகிறீர்கள் என்பதை உணர்தல.

மேற்கண்டவைகளை நீங்கள் படிக்கும்பொழுது புரிந்தும் புரியாமல் ஏதோ ஆன்மீகக் கட்டுரை படிப்பது போல இருக்கலாம். ஆனால் இவை அனைத்து நம் மனதை பண்படுத்தும் அடிப்படை உளவியல் பயிற்சிகள் ஆகும். உண்மையில் நீங்கள் இப்படி கற்பனையில் நினைத்து பார்ப்பதுதான் கனவிலும் நடக்கிறது. நிஜ உலகிலும் இப்படி ஒவ்வொன்றையும் ஒருமுறை கூர்ந்து கவனிக்கலாம். அதற்கு சுமார் 10 நிமிடங்கள் ஆகலாம். ஆனால் அந்த செயலை செய்து முடித்தபின்னும் மனம் ஒரு புத்துணர்வோடு இருப்பதை நாம் உணர முடியும்.

நீங்கள் நான் யார் என உண்மையாக யோசித்திருக்கிறீர்களா??? நான் யார் என 2 நிமிடம் யோசித்தாலே உள்ளுக்கும் ஒரு இனம் புரியாத பயம் போன்ற உணர்வு ஏற்படலாம். இது மனம் தன்னையே கேட்கும் கேள்வியால் ஏற்படுகிறது. நான் என்பது மனம் மட்டுமே.

திங்கள், 1 ஜனவரி, 2018

தமிழறிவோம்

"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.

தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.

மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.

சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.

சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.

'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.

நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.

வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.

தமிழைக் கற்றவருக்கே தமிழின் இனிமை தெரியும்*.

*வாழ்க தமிழ்*..

வியாழன், 16 நவம்பர், 2017

மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 13ம் எண்:

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் 13ம் எண்ணை ராசியற்ற எண்ணாக கருதுகின்றனர். 13ம் எண் என்றாலே அச்சம் ஏற்பட்டு விடுகிறது.

பலரையும் அச்சத்தில் ஆழ்த்தும் அளவுக்கு அப்படி என்ன தான் உள்ளது 13ம் எண்ணில்?

13 என்ற எண்ணை பற்றி உறுதியான எந்த காரணமும் இல்லை ஆனால் எண்ணற்ற கதைகளும் காரணங்களும் மக்கள் மத்தியில் உலா வருகிறது.

இயேசு அளித்த கடைசி விருந்தில் 13வது நபராக இருந்த Judas என்ற நபர் இயேசுவிற்கு துரோகம் செய்ததால் 13ம் எண் ராசியில்லாத எண் என்று கூறப்படுகிறது.

நாசாவால் நிலாவுக்கு ஆராய்சிக்காக அனுப்பப்பட்ட ’அப்பல்லோ 13’ மட்டும் தான் அந்த வரிசையில் தோல்வியை தழுவிய ஒரே விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலர் தங்கள் வீட்டு எண் 13 என வந்தால் ஏற்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.

13 என்ற எண்ணிக்கையில் படிக்கட்டுகளோ, மாடிகளோ தங்கள் வீடு அல்லது அலுவலக கட்டிடங்களில் அமைந்து விடக்கூடாது என பலரும் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும், 13 மட்டுமல்லாமல் 13-ன் கூட்டுத்தொகையான 4 (1+3=4), என்ற எண்ணையும் ஆசியா உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் கெட்ட சகுனமாக பார்க்கின்றனர்.

13ம் எண் என்றாலே ராசியற்றது என கருதப்படும் நிலையில், அந்த 13ம் திகதி ஓர் வெள்ளிக்கிழமை அன்று வந்தால் அது ஒரு தீயசக்தி படைத்த நாளாக உலக மக்களால் கருதப்படுகிறது.

அதாவது இந்த நாளில், வீட்டை விட்டு வெளியில் செல்லாதிருப்பது, புதிய தொழில் தொடங்காதிருப்பது போன்ற நம்பிக்கைகளை மக்கள் கடைபிடிக்கின்றனர்.

இந்நாளில் இங்கிலாந்தில் எவ்வித வணிகமும் நடைபெறாது, மேலும் பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கு என்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் காலங்காலமாக கருதப்பட்டு வருகிறது.

13 என்ற எண்ணின் பின்னால் பல கதைகள் கூறப்பட்டு வந்தாலும், அந்த எண் ராசியற்றதா அல்லது ஆபத்து நிறைந்ததா என்பது தொடர்பான எந்த வித வரலாற்று ரீதியான மற்றும் அறிவியல் ரீதியான காரணங்கள் கண்டறியப்படவில்லை.

எனவே, உலகம் முழுதும் வாழும் மக்களிடம் 13ம் எண் மீதான காரணமற்ற அச்சம் இயல்பாகவே ஏற்பட்டுள்ளது.

செவ்வாய், 31 அக்டோபர், 2017

அமெரிக்காவையே அதிர வைத்த தமிழன்.

விமானம் ஓட்டவே வேட்டி கட்டித்தான் வருவேன்... அமெரிக்காவையே அதிர வைத்த தமிழன்.

அமெரிக்காவில் வானூர்தி ஓட்டவே வேட்டி கட்டித்தான் வருவேன், என் பாரம்பரிய உடையை நான் அணிய நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்..? எனச் சண்டைபோட்டு அனுமதி வாங்கி வேட்டி கட்டி விமானம் ஓட்டிய ஒரே தமிழன் ரவிகரன் ரணேந்திரன்.
இவர் அகரன் என்ற ஏவுகணையை உருவாக்கியவர். தமிழ்ச் சொற்களைத் தவிர்த்துப் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்த விரும்பாத, அனுமதிக்காத ஒரே தமிழன்,
ஈழத்தமிழரான முல்லை மண்ணின் வாரிசு ரணேந்திரன் மட்டுமே. இவரைக் கர்வமாகச் சொல்லலாம் வேட்டி கட்டிய தமிழன் என்று.

இவர் விண் பொறியியல் ஆய்வுத்துறை மாணவனாக அமெரிக்காவில் கல்விகற்று வருகின்றார்.
தனது வெற்றி குறித்து அவர் தெரிவிக்கையில்,
'தொடர் செயற்திட்டங்களின் முதல் படிநிலையாக எனது ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் இரவு பகலாக கடினமாக உழைத்து ‘அகரன்'ஐ உருவாக்கியுள்ளேன்.

இது ஒரு மாதிரி ஏவுகணை முயற்சியாகும்.இதைக்கொண்டு மிகவும் திறன்வாய்ந்த ஏவுகணை அளவுகளை எளிதில் உருவாக்கிடமுடியும்.
ஏவுகணையின் உந்துசக்தி தொடர்பில் நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நான் தேர்ந்தெடுத்த முறைமையால் இந்த ஏவுகணை மிகவும் வினைத்திறன் கொண்டதென ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்று ரவிகரன் ரணேந்திரன் கூறியுள்ளார்.

அதிர்வு

ரவிகரன் யோகேசுவரி ரணேந்திரன்

தமிழ் அறிவோம்...

தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு  சில விளக்கங்கள்...

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?
ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”,
ரெண்டு சுழி “ன” மற்றும்
"ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில்
ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........

தமிழறிவோம்.

புதன், 13 செப்டம்பர், 2017

மண்ணுளிபாம்பு_மர்மம்...

மண்ணுளி பாம்பு நம்மை நக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப்பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய் அதுவாகும்.

#SANDBOA என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நிலங்களில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளன. 

இவை பாம்பு இனமா என்று பார்த்தால், அது பாம்பே அல்ல, அது மண்புழு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெரிய அளவிலான புழு மட்டுமே. மண்ணில் வாழும் இது பாம்பு அல்ல என்கிறது அறிவியல். எனவே இனிமேல் மண்ணுளி புழு என்றழைப்போம்.

இந்த மண்ணுளி மிகுந்த கூச்ச சுபாவம் மற்றும் பயந்த சுபாவம் கொண்டதாகும். இந்த பாம்பினால் மரணம் நிகழ்ந்ததாக இதுவரை எந்த பதிவும் இல்லை.

திடீரென இந்த பாம்புகளை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது?

இந்தக் கேள்விக்கான பதில் எங்கும் கிடைக்காது.  ஏனெனில் இதற்கான உண்மையான பதில் திட்டமிட்டு மறைக்கப் படுகிறது என்பது தான் உண்மை. 

மண்ணுளியின் உடம்பில் உள்ள வெள்ளை அணுக்கள் மனிதருக்கு பயன்படும், கேன்சர், எச்.ஐ.விக்கு மருந்தாகப் பயன்படும் என்பவை அனைத்தும் கட்டுக் கதையே.

இந்தியாவின், குறிப்பாக தமிழர்களின் அடையாளமான இயற்கை விவசாயத்தை அழிப்பு முயற்சியான ஒரு அறிவியல் யுத்தம் (BIO WAR)  என்பது தான் உண்மை.

மண்ணை உண்டு மண்ணிலேயே கழிவு செய்யும் மண்ணுளி புழு ஒரு இயற்கை உர உற்பத்திப் தொழிற்சாலை. இது இடும் எச்சம் வீரியமான இயற்கை உரம். ஒரு நிலத்தில் ஒரு மண்ணுளி புழு இருந்தால் அந்த இடத்தை சுற்றிலும் பல ஏக்கர்களுக்கு போதுமான இயற்கை உர சக்தியினை ஒரு மண்ணுளி புழுவால் உற்பத்தி செய்யப்படும்.

இந்த மண்ணுளி புழுக்கள் மணற்பாங்கான இடங்களையே விரும்பி வாழும். இவை மண்ணில் சுவாசிப்பதன் மூலம் மண்ணின் காற்று உள்புகும் திறனும் அதிகரித்து ஆக்சிஜனும் நைட்ரஜனும் இயற்கையாகவே  மண்ணுக்கு ஏற்றப்படுகிறது.

எந்த காலக்கட்டத்திலும் இயற்கை விவசாயம் தலைத்தோங்கி நிற்க காரணம் என்ன, இவர்களின் இயற்கை விவசாயத்தினை அழிப்பது எப்படி,  நமது செயற்கை உர சந்தையை இவர்களிடம் அதி்கப்படுத்துவது எப்படி என்ற வியாபார புத்தியில் உதித்த உத்தி தான் மண்ணுளி புழு வியாபாரம்.

ஒருவனை ஏமாற்ற வேண்டுமெனில் அவனது ஆசையை தூண்ட வேண்டும் என்ற தந்திரம் தான். மண்ணுளி புழுவினை விலைக்கு வாங்குபவர்கள் சொல்லும் நிபந்தனைகள் தெரியுமா? காயம் இருக்கக் கூடாது, 3 முதல் 5 கிலோ இருக்க வேண்டும்,  என்பார்கள். காயம் இருக்கக் கூடாது எனும் நிபந்தனையின் படி பார்த்தால், அவைகளை பிடிக்கும் முயற்சியில் பெரும்பாலான மண்ணுளிக்கள் காயப்பட்டு விடும். காயம்பட்ட மண்ணுளிகளை நிராகரித்து விடுவார்கள், நாமும் ஓரத்தில் தூக்கி எரித்து விடுவோம். இவைகளுக்கு தப்பிய மண்ணுளிக்கள் தான் எடை அளவுக்கு போகும். அங்கு அனைத்தும் நிராகரிக்கப் படும். ஏனெனில் அவர்கள் நிபந்தனையின் படி 3 முதல் 5 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவெனில் இந்த மண்ணுளி புழுக்கள் சராசரியாக 1 கிலோ அல்லது 1 1/2 கிலோ அளவு தான் இருக்கும். அப்படியான சூழ்நிலைகளில் எடை குறைவாக உள்ளது. அடைத்து வைத்து வளர்த்து வாருங்கள் என்பார்கள். நம்ம மக்கள் அதனை ஒரு தொட்டியிலோ அல்லது ட்ரம்மிலோ போட்டு அடைத்து வைத்து அதன் இயல்பான அசைவுகளை தடுத்து விடுகிறோம்.

இதன் விளைவு! மண்ணுளி புழு மண்னுக்கு அளிக்கும் இயற்கை உரம் தடுத்து நிறுத்தப் படுகிறது. முன்னர் சொன்னது போல பயந்த சுபாவம் கொண்ட இந்த மண்ணுளி புழுக்கள் அடைத்து வைக்கப்பட்ட தொட்டியில் இரண்டு அல்லது மூன்று தினங்களில் இறந்து போகும்.

இவ்வாறாக நம் மக்களுக்கு தூண்டப்பட்ட ஆசையில் உழவர்களின் நண்பனான மண்ணுளிக்கள் தற்போது பெரும்பாலும் அழிக்கப்பட்டு வருகின்றன.

விளைவு: #இயற்கை_விவசாயம்_அழிவுப்பாதையில்_நாம்_செயற்கை_உரத்தினைத்_தேடும்_நிர்பந்தம்.

இப்போது முதல் பாராவினை திரும்ப படியுங்கள். நம் முன்னோர்கள் லெஜெண்ட் என்பது புரியும்.

நன்றி...

வியாழன், 7 செப்டம்பர், 2017

*புற்று நோய்*

*இந்தப் பதிவை படிக்கப் படிக்க ஆச்சரியம் காத்திருக்கிறது. கண்டிப்பாக  படியுங்கள்.

*மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில்  மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் ,  தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன்  பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். அதனால் முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.*

குருநாதர் அகத்தியர் பெருமானுக்கு முதலில் எல்லையில்லாத நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.*

*கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய் ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு  வகையான பூஞ்சை காளான் நோயாகும்.*

*சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார். ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத்தியர் நூலில் இருந்து ஒரு பதிலைத் தெரியப்படுத்தி இருந்தோம். 48 நாட்களில் குணம் கிடைத்தது.*

*அதன் பின் அதே மாதத்தில் இன்னொரு நபர் இமெயிலில் கேன்சருக்கு மருந்து கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு இந்த மூலிகை மருந்து வேலை செய்யவில்லை. கேன்சர் செல்களின் அசுர வளர்ச்சியை குறைக்க முடியவே இல்லை. அகத்தியரின் நூல்களில் ஆயூர்வேத முறைப்படி கூறியுள்ள அனைத்து மூலிகைகளை  பயன்படுத்தியும் எள்ளவும் குறையவே இல்லை.*

*இதன் பின் தான் இதற்கான மருந்து  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்று குருநாதரின் மேல் கோபம் கூட வந்தது,*

*அதன் பின் சில மாதங்கள் கழித்து ஒரு வயதான பெண்மனி நான்கே நான்கு ஓலைச்சுவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து இது எங்க அய்யா காலத்தில் பெட்டியில் வைத்திருந்தார் இதில் என்ன இருக்கிறது என்று படித்து சொல்லலாமா என்றார்.  இதில் ஏதோ மருத்துவ குறிப்பு இருக்கிறது என்று கூறினோம், உடனே அந்த பெண்மணி இது உங்களிடம் இருக்கட்டும் என்று கூறி சென்றுவிட்டார்.  அந்த ஓலைச்சுவடியில் ஒரு பாட்டு இருந்தது அதை இங்கு பகிந்து கொள்கிறோம்.*

*வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்*
*விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்.*
*பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும் பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்*
*நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து உப்பாக்கினால் உனக்கு நிகர் வைத்தியன் பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்*
*பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே !*
                                                                     *– அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17*

*கேன்சர் என்பது நம் உடலுக்கு நஞ்சை விளைவிக்கும் ஒரு வகையான பூஞ்சை காளான்  என்பதை அகத்தியர் தம் ஏட்டு குறிப்பில் உணர்த்தியதோடு அதற்கான மருந்தையும் தன் பாட்டிலே தெரியப்படுத்தியுள்ளார்*

*இதில் நல்வேளை என்ற மூலிகை என்பது தைவேளை செடியை குறிக்கும். நாகதாளி என்பது ஒரு வகையான கொடி, இதன் பூ பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை போல் தோன்றும். இந்த இரண்டையும் எடுத்து உப்பாக்கி கொடுத்தால் நோய் தீரும் என்று பாட்டில் இருக்கிறது.*

*நாகதாளி மூலிகையை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த கொடி வளரும் என்பதையும் பனி அதிகமாக இருக்கும் காலங்களில் தான் இதை கண்டறிந்து பறிக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் இரண்டையும் பறித்து முப்புக்கான அடிப்படை முறையில் இதை உப்பாக்கி வைத்து சூரிய ஒளியில் காயவைத்து எடுத்துக்கொண்டோம்.*

*அதன் பின் இந்த உப்பை நன்றாக  பொடியாக்கி மருத்துவ துறையில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கொடுத்து இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்பினோம். அவரும் மூன்று நாட்கள் கழித்து எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் என்று கேட்டார்,*

*நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றோம்.*

*அவர் கூறினார் நீங்கள் என்னிடம் கொடுத்தது சோடியம் பை கார்பனேட் உப்பு தானே என்றார்.*

*இல்லை  என்று கூறி மறுபடியும் நன்றாக சோதித்து சொல்லுங்கள் என்று நம்மிடம் உள்ள உப்பில் இன்னொரு பகுதியை எடுத்துக்கொடுத்தோம்.*

*இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் கூறினார் அதில் இருப்பது சோடியம் பை கார்பனேட் ( sodium bicarbonate (NaHCO3) )  தான் என்றார்.*

*நாமும் புரியாமல் இதைப்பற்றிச் சொல்லுங்கள் என்றோம்*
*உடனடியாக  அவர் கூறினார் இதுதான் ”சமையல் சோடா “ அல்லது சோடா உப்பு என்று சொல்வார்களே அது தான் இது என்று கூறினார்.*
*அதுமட்டுமல்ல, இது நுண்கிருமிகளை அழிக்கும், துணியில் இருக்கும் அழுக்கைக்கூட இந்த நீரில் ஊறவைத்தாலே சுத்தமாகிவிடும், வயிற்று உப்புசத்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்துவதற்கு,*
*இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடிப்பார்கள்  என்றார் அவர்.*

*அதன் பின் சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate) தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தபோது பல ஆச்சர்யமான உண்மைகள் கிடைத்தது.*

*2008 – ஆம் ஆண்டு சிமோன்சினி (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் வலைப்பூவில்  வெளியீட்டுள்ளார்.*

*இதன் முகவரி http://www.curenaturalicancro.coml/en/*

*பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து குணம் அடைந்ததை ஆதாரத்துடன் தன் வலைப்பூவில்  வெளியிட்டுள்ளார்.  இதுவரை கேன்சர் தொடர்பான  ஆராய்ச்சிகள் என்னென்ன என்பதையும் ஒவ்வொரு விஞ்ஞானிகள் என்னென்ன  கண்டுபிடித்துள்ளார்கள் என்பதையும் இங்கு வீடியோவாக கொடுத்துள்ளோம்.*

*ஈவு இரக்கமே இல்லாமல் கேன்சர் நோயை வைத்து பணம் பறிக்கும் கொள்ளை கூட்டம்  இவரின் மேல் பல புகார்களை கூறி வழக்குகள் பல தொடர்ந்தும் இவரின் உண்மை  தன்மையால் வெளிவந்ததோடு அறிவுடைய மக்களிடையே இந்த மருத்துவ முறை  சென்றடைந்துள்ளது.*

*மருத்துவரால் கைவிடப்பட்ட சில கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப்பற்றிக் கூறி இருந்தோம் இதில் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களைத் தவிர மற்ற கேன்சர் நோயாளிகளுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்தது. மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சிமோன்சினி நேரடியாக ஊசி மூலம் சோடியம் பை கார்பனேட் – ஐ செலுத்தி  குணப்படுத்தியுள்ளார் என்பதையும் அவரது தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.*

*வலி தாங்கமுடியாத மார்பகப் புற்று நோய் முற்றிய ஒரு பெண்மணிக்கு இந்த சிகிச்சைப்பற்றி தெரியப்படுத்தி தினமும் அந்த பெண்மணி இந்த சோடியம் பை கார்பனேட் தண்ணீரில் கலக்கி துணியில் வைத்து மார்பகத்திற்கு ஒத்தடம் மட்டுமே கொடுத்து குணமடைந்துள்ளார். அதன் பின் மருந்துவரிடம் சென்று காட்டியதற்கு இது கேன்சர் கட்டியே இல்லை அதனால் தான் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.*

*இதில் வேடிக்கை என்னவென்றால் அகத்தியர் தம் பாடலில் குறிப்பிட்டபடி இது  ஒருவகையான பூஞ்சை காளான் நோய் என்றே சிமோன்சினி மருத்துவரும் தெரிவிக்கிறார். சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து  என்று தெரிவிக்கிறார். அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில்  தினமும் காலை 1 ஸ்பூன் சோடியம் பை கார்பனேட் மருந்தை 1 டம்ளர் தண்ணீரில்  நன்றாக கலக்கி 1 வாரத்திற்கு எடுக்க வேண்டும் அதன் பின் இரண்டாவது வாரத்தில்  இருந்து காலை 1 ஸ்பூன் மருந்தும், இரவு 1/2 ஸ்பூன் மருந்தாக சோடியம் பை கார்பனேட் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதம் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டாலே நோய் குணமாகும்.* *முக்கியமாக சில கேன்சர் நோயாளியின் உடல் நிலை  கருதி சில நேரங்களில்அவர் மருந்து எடுக்கும் நாட்களில் சோர்வாக காணப்பட்டால் 1 நாள் அல்லது இரண்டு நாள் மருந்தை நிறுத்தி அதன் பின் மூன்றாவது நாளில் இருந்து மருந்தை மறுபடியும் கொடுக்கலாம் என்கிறார்.*

*இந்த கேன்சர் மருந்தைப்பற்றியும் சித்தர்களின் பாடல்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு இம்மருத்துவ முறையை கொண்டு சேருங்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அனுப்பியும் இன்று வரை எந்தப் பதிலும் இல்லை.*

*நாகதாளி என்ற மூலிகையை நமக்கு எடுத்து கொடுப்பதற்காக இரண்டுஆண்டுகளாக காட்டில் ஒருபகுதி கூட விடாமல் சளைக்காமல் தேடி எடுத்து கொடுத்த அன்பர்கள் , இதற்கு வாகன உதவி செய்த நண்பர்கள், உணவு , இருப்பிடம் என அனைத்தும் செய்து கொடுத்த மலைவாழ் மக்கள் என உங்கள் ஒவ்வொருவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.*

*எத்தனை நாட்கள் எங்களுக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்திருப்பீர்கள், பசியோடு இரவு பகல் பாராமல் எத்தனை நாட்கள் காடுகளில் அலைந்திருப்பீர்கள், தானும் தம் குடும்பமும் மட்டுமே வாழவேண்டும் என்ற சுயநலமுள்ள மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையில் நீங்கள் எங்களை நம்பி இந்த உதவி செய்தீர்கள் என்று தெரியவில்லை. இந்த வெற்றி உங்களால் தான் சாத்தியம் ஆகி இருக்கிறது. கண்ணீருடன் மறுபடியும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறோம்.*

*வலைப்பூ வாயிலாக அன்பையும் ஆதரவையும் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...! நன்றி...!! நன்றி...!!!*

*நம் குருநாதரின் ஆசியோடு இந்த மருத்துவ முறையை ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக உள்ளபடியே நம் தமிழ் உறவுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.*

*இதைப்படிக்கும் ஒவ்வொரு நபரும் மறக்காமல் இந்தப்பதிவை எல்லா தமிழ்மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.*

*இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சி செய்து இம்மருந்தை திறமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நம் எண்ணம்.*

*கட்செவி : சித்த மருத்துவம்*

http://www.curenaturalicancro.com/en/